ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தற்போது தமிழகத்திலும் ஹோலிப் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஹோலி பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகின்றது. அதன் பின்னணியில் பல்வேறு புராண கதைகள் உள்ளன. பிரகலாதன் ஹோலிகா கதை, கிருஷ்ணர் தான் கருமையாக இருப்பதாக நினைத்த கதை, சிவன் - பார்வதி காதல் கதை என உண்டு.
அதையும் தாண்டி ஒரு புராண நிகழ்வு நடந்துள்ளது. அதுவும் தமிழகத்தில் என்றால் ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?
காம தகனம், கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மணலுக்குப் பதில் தோண்ட, தோண்ட சாம்பல் கிடைக்கும் அதிசயம் என பல பிரமிப்புகளை ஏற்படுத்துகின்றது நாகப்பட்டினத்தில் உள்ள கொறுக்கையில் உள்ள அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்.